Thendral Vanthu Song Lyrics In Tamil

Thendral Vanthu Song Lyrics In Tamil

 

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்னக் கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நெனப்புல

எவரும் சொல்லாமலே

பூக்களும் வாசம் வீசுது

உறவும் இல்லாமலே

இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே

குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே

மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை

இந்த உலகம் அது போல

ஓடும் அது ஓடும்

இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது

நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே

நிலத்திலே எல்லா துளிர்க்குது

நேசம் பிறந்தாலே

உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக

ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் மனம் போலே

அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே

அந்த இசையால் கூவுதம்மா

கிளியே கிளியினமே

அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன?

வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல

 

Read More: Sakkarai Nilave Song Lyrics In Tamil

Leave a Comment