Sakkarai Nilave Song Lyrics In Tamil

Sakkarai Nilave Song Lyrics In Tamil

 

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே

அதை பற்ற வைத்ததுன் கண்ணே

என் வாழ்கை என்னும் காட்டை எறித்து

குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை

அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்

கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா

அதில் கொள்ளை போனது என் தவறா

பிரிந்து சென்றது உன் தவறா

நான் புரிந்து கொண்டது என் தவறா

ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்

சதையல்ல கல்லின் சுவரா

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்

எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்

எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்தர் சிலை

என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பதே சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க

என்னை ஏன் பிடிக்காது என்றாய்

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

 

Read More: Amma Amma Song Lyrics In Hindi 

Leave a Comment