Maruvarthai Pesathe Song Lyrics In Tamil

Maruvarthai Pesathe Song lyrics in Tamil in the magical voice of Sid Sriram has been penned by Thamarai. The music is given by Darbuka Siva while starring Megha Akash and Dhanush.

 

Quick Facts

 

SongMaruvarthai Pesathe
SingerSid Sriram 
MovieEnai Noki Paayum Thota
LyricistThamarai
MusicianDarbuka Siva

 

Maruvarthai Pesathe Song Lyrics In Tamil

 

மறுவார்த்தை பேசாதே

மடி மீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே

விரல் உன்னை வருடும்

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்டக் கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாகக் கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்

முடியாத மாலைகளில்

வடியாத வேர்வை துளிகள்

பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்

தரும் வாதை அறிந்தோம்

உடைமாற்றும் இடைவேளை

அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்

மடிந்தாலும் வரும்

முதல் நீ

முடிவும் நீ

அலர் நீ

அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்

தொடு வானம் என்றாலும், நீ

விழியோரம் தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தருமுன்பே

கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி

சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கோலம்

இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே

மடி மீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே

விரல் உன்னை வருடும்

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்டக் கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாகக் கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்யில்லையே

மறுவார்த்தை பேசாதே

மடி மீது நீ தூங்கிடு

Read More: Kanna Kaattu Song Lyrics In Tamil

Final Verdict

I showed Maruvarthai Pesathe Song Lyrics In Tamil, So I hope you would like and share it with your friends on social media.