Kanmani Anbodu Song Lyrics In Tamil

Kanmani Anbodu Song Lyrics In Tamil

 

கண்மணி

அன்போட காதலன்

நான் நான்

எழுதும் கடிதம்

லெட்டர் சீ கடுதாசி

இல்ல கடிதமே

இருக்கட்டும் படி

கண்மணி

அன்போடு காதலன்

நான் எழுதும் கடிதமே

பாட்டாவே படிச்சிட்டியா

அப்ப நானும் மொதல்ல

கண்மணி சொன்னன்ல

இங்க பொன்மணி போட்டுக்க

பொன்மணி உன் வீட்டுல

சௌக்கியமா நா இங்க

சௌக்கியம்

பொன்மணி

உன் வீட்டில் சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே

உன்ன நெனச்சு

பாக்கும் போது கவிதை

மனசுல அருவி மாறி

கொட்டுது ஆனா அத

எழுதனுன்னு ஒக்காந்தா

அந்த எழுத்துதான்

வார்த்தை

உன்னை எண்ணிப்

பார்க்கையில் கவிதை

கொட்டுது

அதான்

அதை எழுத

நினைக்கையில்

வார்த்தை முட்டுது

அதே தான்

ஆஹா பிரமாதம்

கவிதை கவிதை படி

கண்மணி அன்போடு

காதலன் நான் எழுதும் கடிதமே

பொன்மணி உன் வீட்டில்

சௌக்கியமா நான் இங்கு

சௌக்கியமே

உன்னை எண்ணிப்

பார்க்கையில் கவிதை

கொட்டுது அதை எழுத

நினைக்கையில் வார்த்தை

முட்டுது ஓஹோ கண்மணி

அன்போடு காதலன் நான்

எழுதும் கடிதமே

பொன்மணி

உன் வீட்டில் சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே

லா லா லா லா லா

லா  லா லா லா லா

ம்ம் எனக்கு

உண்டான காயம் அது

தன்னால ஆறிடும் அது

என்னவோ தெரியல என்ன

மாயமோ தெரியல எனக்கு

ஒன்னுமே ஆவரது இல்ல

இதையும் எழுதிக நடுல

நடுல மானே தேனே

பொன்மானே இதெல்லாம்

போட்டுக்கணும்

இதோ பாரு

எனக்கு என்ன காயம்னாலும்

என் உடம்பு தாங்கிடும் உன்

உடம்பு தாங்குமா தாங்காது

அபிராமி அபிராமி அபிராமி

அதையும் எழுதணுமா

ஹான்

இது காதல் என் காதல்

என்னனு சொல்லாம

ஏங்க ஏங்க அழுகையா

வருது ஆனா நா அழுது

என் சோகம் உன்ன தாக்கிடுமோ

அப்டினு நினைக்கும் போது வர்ற

அழுகை கூட நின்னுடுது மனிதர்

உணர்ந்து கொள்ள இது மனித

காதல் அல்ல அதையும் தாண்டி

புனிதமானது

உண்டான காயமெங்கும்

தன்னாலே ஆறிப் போன மாயம்

என்ன பொன்மானே பொன்மானே

என்ன காயம் ஆன போதும் என்

மேனி தாங்கிக் கொள்ளும்

உந்தன் மேனி தாங்காது செந்தேனே

எந்தன் காதல்

என்னவென்று சொல்லாமல்

ஏங்க ஏங்க அழுகை வந்தது

எந்தன் சோகம் உன்னைத்

தாக்கும் என்றெண்ணும்போது

வந்த அழுகை நின்றது

மனிதர் உணர்ந்து கொள்ள இது

மனிதக் காதலல்ல அதையும்

தாண்டிப் புனிதமானது

அபிராமியே

தாலாட்டும் சாமியே

நான் தானே தெரியுமா

சிவகாமியே சிவனில்

நீயும் பாதியே அதுவும்

உனக்கு புரியுமா

சுப லாலி லாலியே

லாலி லாலியே அபிராமி

லாலியே லாலி லாலியே

அபிராமியே தாலாட்டும்

சாமியே நான் தானே தெரியுமா

உனக்கு புரியுமா

லா லா லா லா லா

லா  லா லா லா லா

லா லா லா லா லா

லா  லா லா லா லா

 

Read More: Kanne Kalaimane Song Lyrics In Tamil

 

Leave a Comment